மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக மற்றும் திமுக கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரம் ஆதின மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரியா சுவாமிகள் நிர்வகித்து வருகிறார். இவரை பணம் கேட்டு மிரட்டியதாக மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மீது ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் மற்றும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர், ஆதீனத்தின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அதனை தனியார் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க பணத்தை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி, தன்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், தங்கள் சார்பில் திருவெண்காட்டைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் என்பவர் தொடர்பு கொள்வார் என்றும், செம்பனார்கோயிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பாஜகவின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்ததாகவும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மடாதிபதி தரப்பில் அளிக்கப்பட்ட புகார் உண்மை என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் 323, 307,389, 506(2), 120 B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,
வினோத், ரவுடி விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், பாஜக மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் பாஜக, திமுக, இந்தக் குற்றச்செயல்களில் கூட்டணி போட்டு ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே முனுமுனுக்கச் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் அகோரம், கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாகவும், தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய புகாரில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.