தர்மபுரி மாவட்டம் நகர பகுதியில் அடுத்தடுத்த நான்கு கடைகளின் பூட்டை உடைத்து 3 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் நகர பகுதியில் சாலை விநாயகர் ரோடு பகுதியில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் ஒரு மருந்தகம், இரண்டு பாத்திர கடைகள் மற்றும் ஒரு ஆட்டோ மொபைல் கடை என நான்கு கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை கடைகளில் கல்லா பெட்டிகள் திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கடைகளின் உரிமையாளர்கள் பூட்டிய கடைகளுக்குள் எப்படி பணம் திருடுபோனது என அதிர்சியில் இருந்த கடை உரிமையாளர்கள் தேடி பார்த்த பொழுது மேற்கூரைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கடை உரிமையாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடைகளில் நுழைந்து ஆய்வு செய்தனர். இதனையடுத்து, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் சுமார் 25 வயதுடைய இளைஞர் முகத்தை மூடியவாறு கடைகளுக்குள் மேற்கூரையில் இருந்து இறங்கி சென்று பணத்தை திருடி செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதில் மூன்று கடைகளில் பெரியளவில் பணம் இல்லாமல் ரூ.ஐந்தாயிரத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. அந்த பணம் மற்றும் உண்டியலில் இருந்த பணம் மற்றும் பாத்திர கடையில் சுமார் 3 லட்சம் ரூபாய் இருந்துள்ளது. அதனை திருடிச் சென்றுள்ளார்.
மேலும் இந்த கடைகளில் வைத்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அநத பகுதியில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களை வைத்து தர்மபுரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி நகர காவல் நிலையம் மற்றும் மதிகோண்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.