தருமபுரி அரூர் அருகே தீ விபத்தால் 3500 க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கல்லடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் சசி (வயது 47). இவர் கடந்த 13 வருடங்களாக கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். தகர செட்டு கூரையினால் அமைக்கப்பட்ட கோழிப்பண்ணையில் 3500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சசி இயற்கை உபாதை கழிக்க வீட்டிற்கு வெளியில் எழுந்து வந்து பார்த்த போது, கோழி பண்ணையிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கோழிப்பண்ணையின் அருகே சென்று பார்த்த போது, தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.
இது குறித்து அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு சசி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் கோழிப்பண்ணையில், இருந்த 3500க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாகின. சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.2 லட்சம் மதிப்பிற்கான கோழிக் குஞ்சுகள் என மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார். இந்த தீ விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி சசி கூறுகையில், “தனியார் நிறுவனம் மூலம் வாங்கி வளர்க்கப்படும் கோழி குஞ்சுகளுக்கு இதுவரையில் தனியார் நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளுக்கு எந்த ஒரு காப்பீடுகளும் செய்து தருவதில்லை. இதன் காரணமாக இயற்கை சீற்றத்தால் உயிரிழக்கும் கோழிக்குஞ்சுகளுக்கு இதுவரையில் எந்த ஒரு நிவாரணமும் கிடைக்க பெறுவதில்லை.
ஆகவே, இத்தொழிலை நம்பி இருக்கும் தங்களுக்கு இது பேரிழப்பாக உள்ளது. ஆகவே, கருணை அடிப்படையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு நிவாரண தொகை வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.