தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் மக்களை காலி செய்ய கோரி வீடுகளில் நோட்டிஸ் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுத்து அதனை அகற்ற வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனையடுத்து, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி 1வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலாக 28 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இடம் அரசுக்கு சொந்தமான குட்டை புறம்போக்கு என்பதால் அனுமதி பெறாமல் அனுபவத்தில் வைத்துக் கொண்டு இருப்பது தெரிய வருகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள இடங்களை அகற்ற வேண்டும் எனவும், குடியிருக்கும் நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதியில் உள்ள அனைவரின் வீடுகளிலிலும் வருவாய்த்துறை சார்பில் நோட்டிஸ் ஓட்டப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது :- தாங்கள் இப்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு அரசாங்கம் சார்பில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு பேரூராட்சி சார்பில் கான்கிரீட் சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவைகள் செய்து தரப்பட்டுள்ளன.
மேலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி, மின்சார வரி உள்ளிட்டவைகளை தொடர்ந்து கட்டி கொண்டு தான் வருகிறோம். ஆகையால் நாங்கள் வாழும் இந்த பகுதி குட்டை புறம்போக்கு இடம் இல்லை. திடீரென முன்னறிப்பின்றி நோட்டீஸ் ஒட்டி எங்களை இப்பகுதியில் இருந்து காலி செய்ய கூறினால், நாங்கள் எப்படி காலி செய்ய முடியும்.
நாங்கள் எங்கே செல்வது, ஆகையால் இந்த இடத்தை நாங்கள்காலி செய்ய மாட்டோம். அதையும் மீறி எங்களை காலி செய்ய சொல்லி வற்புறுத்தினால் இப்பகுதியில் உள்ள அனைவரும் தீ குளித்து தற்கொலை செய்து கொள்வோம், என வேதனையுடன் தெரிவித்தனர்
இதற்கு உரிய தீர்வு காண தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதயில் பரபரப்பு ஏற்பட்டது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.