தருமபுரி : நலத்திட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு என்றும், ஆட்சி செய்ய கையாலாகாதவர் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கே.பி அன்பழகன் பேசும்போது, நிர்வாக திறமையற்ற, ஆட்சி செய்ய கையாலாகத முதல்வர் தான் மு.க.ஸ்டாலின் என்றும், பாலக்கோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க திராணி உண்டா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எதிர்கட்சியாக திமுக இருந்தபோது ஒருநிலைபாடும், ஆளும் கட்சியாக வந்த பிறகு வேறு நிலைபாடும் கொண்டுள்ளதாகவும், அதிமுக கொண்டு வந்த எண்ணற்ற நலதிட்டங்களுக்கு மூடு விழா செய்து வருவதாகக் கூறிய அவர், திமுக 20 மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் ஆவேசமாக பேசினார். இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.