Categories: தமிழகம்

இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு – தற்கொலையா? கொலையா?..

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே உள்ள குக்கல்மலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(32) லாரி ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். இவரது, மனைவி ஸ்ரீதேவி ( 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஆறு வயது குழந்தையும் ஹாசினி என்ற மூன்று வயது குழந்தையும் உள்ளனர்.

கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஸ்ரீதேவி தனது பெரிய குழந்தையின் காலில் தனது காலுடன் ரிப்பனை கட்டிக்கொண்டு சிறிய குழந்தையுடன் அருகே உள்ள பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இது குறித்து, அவரது கணவர் அளித்த தகவலின் பேரில் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மூன்று சடலங்களையும் கைப்பற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பொம்மிடி போலீசார் சடலங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர். இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

8 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

8 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

9 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

10 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

11 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

14 hours ago

This website uses cookies.