தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே உள்ள குக்கல்மலை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன்(32) லாரி ஓட்டுநராக பணியாற்றி உள்ளார். இவரது, மனைவி ஸ்ரீதேவி ( 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு கனிஷ்கா என்ற ஆறு வயது குழந்தையும் ஹாசினி என்ற மூன்று வயது குழந்தையும் உள்ளனர்.
கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக ஸ்ரீதேவி தனது பெரிய குழந்தையின் காலில் தனது காலுடன் ரிப்பனை கட்டிக்கொண்டு சிறிய குழந்தையுடன் அருகே உள்ள பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அவரது கணவர் அளித்த தகவலின் பேரில் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மூன்று சடலங்களையும் கைப்பற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பொம்மிடி போலீசார் சடலங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கொலையா? தற்கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறனர். இரண்டு பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.