தர்மபுரி அருகே பாலியல் புகாரில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வந்தவர் சகாதேவன் (வயது 55). இவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில், நேற்று பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் சகாதேவனை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.
பாலியல் புகாரில் சிக்கி, கைதாகி உள்ள சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சகாதேவன் மீது ஏற்கனவே சில புகார்கள் எழுந்தன. இவர் பணியில் இருந்த போது, தர்மபுரி மாவட்ட பல்வேறு காவல் நிலையங்களில், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்களை தன்னிச்சையாக செயல்பட்டு தனியாருக்கு விற்பனை செய்ததாக, விதிகளை மீறி, வேறு நபர்களுக்கு விற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.