தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் நவலை ஆகிய பகுதிகளில் இடி மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் மற்றும் பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், நவலை, ஆர்.கோபிநாதம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. நவலை பகுதியைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் முனியப்பன் தனது வீட்டின் மீது வேலை செய்து முடித்து கீழே இறங்கும் பொழுது, இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… யூடியூபர் பெலிக்ஸ் மீதும் கோவை போலீசார் நடவடிக்கை..!!
அதேபோல் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவருடைய மனைவி சித்ரா பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது, தென்னை மரத்தின் மீது இடி மின்னல் தாக்கி பின்பு பசு மாட்டின் மீதும் பால் கறந்து கொண்டிருந்த சித்ரா மீதும் இடி மின்னல் விழுந்ததில், பசு மாடும், சித்ராவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இருவரின் உடலையும் ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தாலும், பசு மாடு உயிரிழந்த சம்பவத்தாலும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.