தர்மபுரியில் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணம், நகையை மர்ம நபர்கள் இலாவகமாக திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலராக உள்ள ஜெயலட்சுமியின் கணவர் வெங்கடேசன். இவர் அரூர் நான்கு ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கியில் இருந்து தனது 12 பவுன் நகையையும், 50000 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சிறிது தூரம் வந்த அவர், தனது நண்பரின் கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.
அவர் உள்ளே சென்ற ஒரு நிமிடத்திற்குள் அவரை பின் தொடர்ந்து வந்த காவி வேஷ்டி கட்டிய மர்ம நபர் ஒருவர் தங்களின் கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து ஸ்கூட்டியின் சீட்டுகடியில் வைக்கப்பட்ட 50000 ரூபாய் பணத்தையும், 12 பவுன் நகையையும் திருடி சென்றுள்ளனர்.
அதன் பின் அவர் அரூர் பஸ் ஸ்டாண்டுக்கு சென்று வண்டியின் சீட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பணத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.