இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இருக்கும் மஹேந்திர சிங் தோனிக்கு ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி திரை பிரபலங்களுக்கு எந்த அளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே அளவு தோனிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவரது தயாரிப்பு நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்து வந்த சஞ்சய் என்பவர் இணைந்துள்ளார் என்றும் இவரின் மூலமாக தோனி தமிழில் படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் சில செய்திகள் வெளியானது.
மேலும் தோனி தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க போகிறார் என்கிற தகவல் இணையதள பக்கங்களில் தீயாக பரவி வந்தது. இந்நிலையில் இணையத்தில் பரவிய இத்தகைய செய்திகள் போலியானது என்று தோனியின் தயாரிப்பு நிறுவனம் அதன் வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கூறுகையில், ‘தோனி எண்டெர்டெயின்மெண்ட் சஞ்சய் என்கிற பெயரில் யாருடனும் பணியாற்றவில்லை. எங்கள் நிறுவனம் தற்போது யாரையும் பணியமர்த்தவில்லை, அதனால் யாரும் இதுபோன்ற போலியான தகவல்களை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் எங்கள் தயாரிப்பு குழு வேறொரு வித்தியாசமான திட்டத்தை செய்து வருகிறது. விரைவில் அந்த அற்புதமான திட்டம் குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வோம். அதுவரையில் காத்திருங்கள்’ என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் தோனி நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.