Categories: தமிழகம்

நீக்கப்பட்ட 438 வாக்குகளை கள்ள ஓட்டாக பதிவு செய்ததா திமுக? சிக்கிய ஆதாரம்.. மறுதேர்தல் நடக்க வாய்ப்பு?!!

கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டில் இருந்து 438 வாக்குகள் நீக்கப்பட்டு வார்டு மறுவரையரை படி 13வது வார்டில் சேர்க்கப்பட்ட நிலையில் 438 வாக்குகளை திமுகவினர் 12 ஆவது வார்டிலேயே கள்ளஓட்டாக பதிவு செய்தது அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று கடந்த 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நகராட்சியாக இருந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாறிய நாகர்கோவில் மாநகராட்சியில் சில ஊராட்சிகள், இணைக்கப்பட்டு வார்டுகள் மறுவரையரை செய்யப்பட்டது.

அதன்படி நாகர்கோவில் மாநகர் 12 ஆவது வார்டில் இருந்து 438 வாக்குகள் 13 ஆவது வார்டுக்கு மாற்றப்பட்டு வார்டு மறுவரையரை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 12வது வார்டில் அதிமுகவின் வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் திமுகவினர் சதி செயல் மற்றும் முறைகேடு மூலமாக 13 ஆவது வார்டுக்கு மாற்றப்பட்ட 438 வாக்குகளை 12 ஆவது வார்டிலேயே கள்ள வாக்குகளாக பதிவு செய்து இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திமுகவின் இந்த சதி செயல் மற்றும் முறைகேடு காரணமாக கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த 12வது வார்டில் அதிமுக வேட்பாளர் சகாயராஜ் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில் 12 ஆவது வார்டில் திமுகவினர் செய்த அராஜகம் மற்றும் கள்ள ஓட்டுப்பதிவு குறித்த தகுந்த ஆதாரங்களுடன் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக வேட்பாளர் சகாயராஜ் புகார் அளித்தார்.

ஆனால் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காத்து வரும் நிலையில் நடவடிக்கை இல்லை என்றால் மக்கள் போராட்டத்துடன் நீதிமன்றம் செல்வோம் என அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் வார்டு மறுவரையரை செய்தி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் வாக்கு பதிவிற்கு பழைய வாக்காளர் பட்டியல் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதோடு கள்ள வாக்குகள் பதிவு செய்த திமுகவினருக்கு சாதகமாக பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தேர்தல் வெற்றி அறிவிப்பை திரும்ப பெற்று 12வது வார்டில் மறுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இதெல்லாம் மக்களுடன் ஒட்டவே ஒட்டாது… விஜய்யை ‘அது’ என ஒருமையில் பேசிய பிரபலம்..!

சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…

18 minutes ago

அதிகாலையிலேயே அதிர்ச்சி… சிலிண்டர் விலை உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…

1 hour ago

ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!

கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…

12 hours ago

அந்த ஐட்டம் பாடலை நான் பாடி இருக்கக்கூடாது..ஓபனாக பேசிய ஷ்ரேயா கோஷல்.!

பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…

13 hours ago

நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!

பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…

14 hours ago

ஆட்சியரின் முட்டாள்தனமான பேச்சுக்கு காரணமே முதலமைச்சர்தான்.. அண்ணாமலை கண்டனம்!

சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…

14 hours ago

This website uses cookies.