தேர்தல் அறிக்கையை காப்பி அடிச்சோமா? அதிமுக அறிக்கை தாமதமாக எழுத்துப் பிழையே காரணம் : ஆர்பி உதயகுமார் விளக்கம்!
தேனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 10,000 மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி பேசும்போது முதலில் புரட்சித்தலைவர் எனக் கூறிவிட்டு சாரி புரட்சித் தமிழர் என எடப்பாடியை முன்னிலைப்படுத்தி பேச்சை துவக்கினார்.
தேர்தல் வாக்குறுதி குறித்து கேட்டதற்கு பிரச்சாரத்தின் போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அதிமுக தேர்தல் அறிக்கை பிரின்டிங் மிஸ்டேக் ஏற்பட்டிருந்ததால் ஒரு நாள் காலதாமதமாக வந்தது, திமுகவிற்கு முன்னால் நாங்கள் தேர்தல் அறிக்கை தயாரித்தோம் அதற்கான ஆதாரம் உள்ளது.
பாரத பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருவதினால் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வெளிச்சம் கிடைத்து வருகிறது, அவர் வந்து சென்ற பிறகு அவர்கள் இருட்டுக்குள் சென்று விடுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.