மதுரை ; மதுரை சரகத்திற்கு உட்பட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் மன அழுத்தம் போக்குவது குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மதுரை சரகத்திற்கு உட்பட்ட மதுரை மாநகர், மாவட்டம், விருதுநகர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக காவல்துறை இயக்குனர் (டிஜிபி) சங்கர்ஜிவால் தலைமையில் காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது குறித்தும், சட்ட ஒழுங்கு மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை டிஐஜி விஜயகுமார் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், தமிழக டிஜிபி இன்று மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவல்துறையினர் மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுப்பது, சைபர் கிரைம் குற்றங்களை அதீத கவனத்துடன் கண்காணித்து சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க வேண்டும் எனவும், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கிவருகிறார்
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
This website uses cookies.