திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள தோப்புப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 35). இவருக்கும், வீரைய்யா என்பவருக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. சில வருடங்களுக்கு முன்பு கணவன் வீரைய்யா, தனது தாய், தந்தை உதவியுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மேலும் காளியம்மாளின் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், தொடர்ந்து தன்னையும், தன் மகனையும் இழிவு படுத்தி வந்ததால், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், வழக்கிற்கும் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவதாகவும் கூறி, காளியம்மாள் மற்றும் அவரது மகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
This website uses cookies.