திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து முழுவதுமாக எரிந்தது.
திண்டுக்கல் அரண்மனை குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி. இவர் வாடகைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று ஒத்த கண் பாலம் அருகே ஒரு இறந்த உடலை கொண்டு சென்று இறக்கி விட்டு பின்னர் நாகல்நகர் ரவுண்டானா அருகே அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அருகாமையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பை தீப்பற்றியதில் எதிர்பாராதவிதமாக அருகில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் மளமளவென எரியத் தொடங்கிய தீயினால் ஆம்புலன்ஸ் வாகனம் முழுவதும் சேதமாகியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இது குறித்து நகர் வடக்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.