விழுப்புரம் வெள்ளத்திற்கு விஜயின் தவெக மாநாடு காரணம் என திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.
சென்னை: சென்னை அடுத்த மாங்காடு பகுதியில் திமுக கூட்டம் நடைபெற்றது. இதில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு மேடையில் பேசினார். அப்போது பேசிய அவர், “எனக்கு 65 வயது ஆகிறது. இத்துணை வருட அனுபவமும் இருக்கிறது.
ஆனால், விழுப்புரத்தில் வெள்ளம் வந்து நான் பார்த்ததே இல்லை. என் கண் முன்னாலே, அம்மன் கோயில் சிலைகள், ஆடு, மாடுகள் எல்லாம் அடித்துக் கொண்டு போனது. என்ன காரணம் என கேட்டபோது ஒரு கிழவி கூறியது, என்னைக்கு இந்த பாழாகப் போனவர்கள் விக்கிரவாண்டியில் வந்து மாநாடு போட்டார்களோ, அன்றைக்கு விளங்காமல் போனது.
இதனை நான் சொல்லவில்லை. இரண்டு கிழவிகள் பேசிக் கொண்டிருந்தனர், நான் ஒட்டுக் கேட்டேன். ஒரு ஊரில் நல்ல விஷயங்கள் நடந்தால் தான், அந்த ஊரில் நல்லது நடக்கும்” எனக் கூறினார். இது மறைமுகமாக, விஜயின் தவெக மாநாட்டைக் குறிப்பிட்டதால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அக்டோபர் 27-இல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்னும் கிராமத்தில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி வைத்து, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை அறிவித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியர் கழிவறையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!
மேலும், இம்மாத தொடக்கத்தில் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, திண்டிவனம், செஞ்சி, மயிலம், மரக்காணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின. சுமார் 11 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கின. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.