திண்டுக்கல் : கொடைக்கானலில் மூன்று மாத கர்ப்பிணியான இளம் பெண் மோனிஷா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவர் ஆரோக்கிய சாம் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் வசித்து வந்த மோனிஷா என்ற 23 வயதுப் பெண் வட்டகானல் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சாம் என்பவரை ஆறு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணமாகி ஆறு மாதம் முடிந்த நிலையில், 3 மாத கர்ப்பிணியாக இருந்த மோனிஷா, கடந்த ஜூன் 4ம் தேதி வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்ததாக, காவல்துறைக்கு மோனிஷாவின் கணவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயது மோனிஷா 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவர் எவ்வாறு தூக்கிட்டு கொள்வார் என்று, மோனிஷாவின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, அன்றே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், விசாரணை தீவிர படுத்தவில்லை என ஆத்திரமடைந்த மோனிஷாவின் பெற்றோர் மற்றும் உறவினர் கடந்த சில நாட்களுக்கு முன் நாயுடுபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று தற்கொலைக்கு தூண்டியதாக கூறி மோனிஷாவின் கணவர் ஆரோக்கிய சாம் என்பவரை கொடைக்கானல் காவல் துறை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.