கொடைரோடு அருகே குடும்ப தகராறு காரணமாக நள்ளிரவில் நான்கு பேரை சராமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த அம்மையநாயக்கனூர் அருகே தோட்ட குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற இரயில்வே ஊழியர் ராசு (67). இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் (60) தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், நான்கு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் முத்துப்பாண்டி தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது, மூன்றாவது மகன்கள் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டனர். இதனை அடுத்து கடைசி மகன் மருதுபாண்டி (30) பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மேலும் படிக்க: மீண்டும் அதிகரித்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
இந்நிலையில் இரண்டாவது மகனின் மனைவி ஜெயலலிதாக்கும், அவரது மாமனார், மாமியாருமான ராசு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து நேற்று நடந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில், ஜெயலலிதாவின் தந்தை முருகேசனையும், அவரது மகன் அருண்குமாரையும் ராசு குடும்பத்தினர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த முருகேசன் மற்றும் அவரது மகன்கள், மகன்களின் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு வீடு புகுந்து ராசு, மருதுபாண்டி, பாண்டியம்மாள் மற்றும் பாண்டியம்மாளின் தம்பி மலைச்சாமி உட்பட 4 பேரையும் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.