கூட்டுறவு பண்டக சாலையில் பட்டாசு விற்பனையில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல் நகராட்சி. மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்களுக்காக கொடைக்கானல் நகர்மையப் பகுதியில் கூட்டுறவு பண்டகசாலை பல வருடங்களாக இயங்கி வருகிறது.
பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு அரிசி பருப்பு மற்றும் சோப்பு முதல் அனைத்து பொருட்களும் இந்த பண்டக சாலையில் விற்பனையாகிறது. மேலும், பொதுமக்களும் அதிகம் ஆர்வமுடன் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி செல்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரசு அனுமதி உடன் கூட்டுறவு பண்டகசாலையில் பட்டாசுகள் விற்கப்படுவது வழக்கம். கூட்டுறவு பண்டகசாலையில் வேலை செய்யும் நபர்கள், பட்டாசு வாங்கும் பொதுமக்களுக்கு ரசீது வழங்காமல் பட்டாசுகளை விற்பனை செய்து வந்தனர்.
இது தொடர்பாக, பொதுமக்கள் சமூக வலைதளங்களிலும், அதேபோல் நேரடியாக கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் நகர் மன்ற துணைத் தலைவர் உள்ளிட்டவர்களை சந்தித்து புகார் அளித்தனர்.
இதனை அடுத்து, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் மற்றும் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் நேரடியாக வந்து பண்டகசாலை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.