பழனியில் பட்டப் பகலில் வீடு புகுந்து ஸ்போர்ட்ஸ் சைக்கிளை மர்மநபர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் லயன்ஸ் கிளப் ரோட்டை சேர்ந்தவர் மனோகரன். இவர் சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள், ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஆகியவற்றை நேற்று நிறுத்தி வைத்திருந்தார். மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் வீட்டின் கதவை திறந்து வீட்டில் இருந்த இருபதாயிரம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் சைக்கிளை திருடி சென்றுள்ளார்.
மாலையில் வந்த போது சைக்கிளை காணாததால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை போட்டு பார்த்த போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் வீட்டிற்கு வருவதும், கதவை எட்டிப் பார்த்து அதை திறந்து உள்ளே சென்று சைக்கிளில் திருடி செல்வதும் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மனோகரன் பழனி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
பழனியில் சமீப காலமாக இருசக்கர வாகனத்தை விட்டு அதிகரித்து வருகிறது. பட்டப்பகலிலேயே இது போல திருட்டுகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆகவே போலீஸார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு திருடர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…
தொடர் தோல்வி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க…
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
This website uses cookies.