வனவிலங்குகளின் உடல் பாகங்களை பதுக்கி வைத்த ஜோதிடர்… சோதனையில் திடுக்கிட்டுப் போன வனத்துறையினர்..
Author: Babu Lakshmanan17 May 2022, 11:10 am
திண்டுக்கல் அருகே மான் தோல், மான் கொம்பு மற்றும் ஆமை ஓடு வைத்திருந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் இன்மாவட்டம் சிறுமலை அடிவாரம் பகுதியில் உள்ளது ரெட்டியபட்டி கிராமம். இந்தப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் பிரபு அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறுமலை வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான குழு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது ரெட்டியபட்டியில் உள்ள ஜோசியர் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் புள்ளி மான் தோல்(3), கடமான் கொம்பு (3), நரிபல் (6), ஆமை ஓடு 17 மற்றும் காட்டுப்பன்றி மண்டைஓடு, பல் ஆகியவற்றை மாவட்ட வன பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து சுந்தரமூர்த்தி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜோசியர் வீட்டில் அரசால் வேட்டையாட தடை செய்யப்பட்ட மான் தோல், கொம்பு மற்றும் ஆமை ஓடு போன்றவை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.