திண்டுக்கல் அருகே மான் தோல், மான் கொம்பு மற்றும் ஆமை ஓடு வைத்திருந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் இன்மாவட்டம் சிறுமலை அடிவாரம் பகுதியில் உள்ளது ரெட்டியபட்டி கிராமம். இந்தப் பகுதியில் மாவட்ட வன அலுவலர் பிரபு அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறுமலை வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான குழு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது ரெட்டியபட்டியில் உள்ள ஜோசியர் சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் புள்ளி மான் தோல்(3), கடமான் கொம்பு (3), நரிபல் (6), ஆமை ஓடு 17 மற்றும் காட்டுப்பன்றி மண்டைஓடு, பல் ஆகியவற்றை மாவட்ட வன பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து சுந்தரமூர்த்தி என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜோசியர் வீட்டில் அரசால் வேட்டையாட தடை செய்யப்பட்ட மான் தோல், கொம்பு மற்றும் ஆமை ஓடு போன்றவை பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.