Categories: தமிழகம்

‘இதுக்கு மேல பேருந்து வராது’.. போதையில் இருந்த நடத்துநர்..? சிகரேட் பிடித்தபடி பயணிக்கு அலட்சிய பதில்..!!

அரசு பேருந்தில் பயணிகளை ஏற்ற முடியாது எனக் கூறிய பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சிகரெட் பிடித்தபடி அசால்டாக பதில் சொல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலையான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, தடியன் குடிசை, கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி, ஆடலூர், பன்றிமலை போன்ற பகுதிகளுக்கு தினந்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயத்தையும், விவசாயக் கூலியையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு வத்தலகுண்டு மற்றும் ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து தினசரி மதியம் 1:30க்கு புறப்படும் அரசு பேருந்து ஊத்து பண்ணைக்காடு, தாண்டிக்குடி, குப்பம்மாள் பட்டி, கேசி பட்டி வழியாக ஆடலூர் பகுதிக்கு மாலை 4.45 மணிக்கு செல்லும். அங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, மீண்டும் இதே வழியில் வத்தலகுண்டு வந்து சேரும்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பியது. இந்நிலையில் பேருந்துக்காக தடியன் குடிசை பகுதியில் ஆடலூர் கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட பகுதி மக்கள் அரசு பேருந்துக்காக காத்திருந்தனர்.

தடியன் குடிசை வந்த அரசு பேருந்து அங்கிருந்து கேசி பட்டி, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாது. நாங்கள் இப்படியே திரும்பிச் செல்கிறோம் என்று பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் கூறியுள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் எங்களது பகுதிக்கு வேறு வாகனம் கிடையாது, நீங்கள் பேருந்து தொடர்ந்து இயக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அதே போல் பேருந்து நடத்துனர் சிகரெட் பிடித்தபடி உங்களது பகுதிக்கு பேருந்து செல்லாது, நீங்கள் வேறு வாகனத்தை பிடித்துக் கொண்டு செல்லுங்கள் என்று அசால்டாக கூறியுள்ளார். மேலும், இப்பகுதியில் வன விலங்குகளுக்கான யானை மற்றும் காட்டு மாடுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. யானையால் தாக்கி பல விவசாயிகள் இறந்துள்ளனர்.

அதேபோல், தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையும் பொதுமக்கள் ஓட்டுனர் நடத்தினரிடம் கூறியுள்ளனர். தற்போது வனவிலங்குகள் தாக்குதல் அதிகமாக உள்ளது. நாங்களும் பல மணி நேரமாக அரசு பேருந்துக்காக காத்திருந்து உள்ளோம். வேறு பேருந்து கிடையாது, தினமும் பயணிகளை இறக்கி விடும் நீங்கள், இறக்கி விட வேண்டும் என கூறியுள்ளனர். இருவரும் இறக்கி விட முடியாது என்று கூறியதையடுத்து, பேருந்து ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பேருந்து பயணிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதில் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் பொதுமக்கள் இடையே கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.

மலை கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும், மேலும் மலை கிராமங்களில் வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. அதேபோல் அரசு பேருந்துகள் மட்டுமே அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கிடையாது. இப்படி உள்ள சூழ்நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு மேல் பேருந்துகள் செல்லாது என்று கூறுவதோடு, மது போதையில் இருந்து கொண்டு பேருந்து பயணிகளை மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

https://player.vimeo.com/video/859781960?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

ஆகவே தமிழக அரசு உடனடி தலையிட்டு இதுபோன்ற பயணிகளிடம் மிரட்டுவதும், பேருந்துகளை இயக்க முடியாது என்று கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் செல்ல வேண்டும் பயணிகளை யாரும் இறக்கி விடக்கூடாது, அதை மீறி இறக்கிவிட்டு இது பயணிகளிடம் சண்டையிடும் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…

6 minutes ago

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

51 minutes ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

12 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

13 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

14 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

14 hours ago

This website uses cookies.