பட்டப் பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள் மனைவி கண் முன்னே ஒருவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ராசிஇருளப்பன் (42). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் தனது வீட்டில் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த ராசி இருளப்பனை, இதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு வெளியே இருந்து கூப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, ராசி இருளப்பன் வீட்டை விட்டு வெளியே வந்த பொழுது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் ராசிஇருளப்பனை மனைவி கண் முன்னே கொடூரமாக வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த ராசிஇருளப்பன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.