திண்டுக்கல் : திண்டுக்கல் பெஸ்கி கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சார்ந்த கதிரேசன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக, அதே ஊரைச் சார்ந்த ஓட்டுனர் மாணிக்கம் என்பவர் ஓட்டி வந்தார். அதில், இ. சித்தூரைச் சார்ந்த நாகேந்திரன் (26), விக்னேஷ் (18) ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது, மூவரும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு வெளியே வந்த போது, என்ஜின் கோளாறு காரணமாக மளமள என தீப்பற்றி எரிந்தது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சாமர்த்தியமாக வாகனத்தை உடனடியாக வெளியே கொண்டு வந்தனர். பொதுமக்களும் தீயணைப்புத் துறையினரும் தீயை உடனடியாக அணைத்தனர்.
இதனால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெட்ரோல் பங்கில் நடந்த இந்த தீ விபத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.