ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சாலையில் கொல்லப்பட்டி அருகே பாளையம் பகுதி சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் அதே ஊரைச் சேர்ந்த சேகர் ஆகியோர் இருவரும் ஒரு டூவீலரில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி சென்றுள்ளனர்.
அதேபோல், ரெட்டியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவருடன் உடன் வேலை செய்யும் தென்னம்பட்டி சேர்ந்த துரைராஜ் என்பவரும் ஆகிய இருவரும் ஒரு டூவீலரில் வேடசந்தூர் பகுதியில் இருந்து மேற்கு நோக்கி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ரத்தினம், சேகர் சுதாகர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
துரைராஜ் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில், அங்கு இருந்த நிலையில், அங்கு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து ஒரு லாரி சென்று அருகில் நின்றுள்ளது. இந்நிலையில் சீத்த மரம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற தனியார் வங்கியில் வேலை செய்யும் வாலிபர் ஒரு ஸ்கூட்டியில் சென்றுள்ளார். விபத்து நடந்தது தெரியாமல் நின்றிருந்த லாரி மீது மோதி அவரும் படுகாயம் அடைந்துள்ளார்.
காயமடைந்த பிரவின் குமார் மற்றும் துரைராஜ் ஆக இருவரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி துரைராஜ் என்பவர் உயிரிழந்தார். தனியாக ஸ்கூட்டியில் வந்த பிரவீன் குமார் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதி கொண்டதில் நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.