திண்டுக்கல் ; தனக்கு சொந்தமான இடத்திற்கு வாடகைதாரர் மாநகராட்சியில் வரி கட்டி இடத்தை அபகரிப்பு முயற்சி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெட்ரோல் கேனுடன் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மெங்கில்ஸ் ரோடு பகுதியில் வசித்து வருபவர் சகாய மேரி, மாமியார் மேரி சிங்கராயர் ஆகியோர் ஒரே இடத்தில் வசித்து வருகிறோம். முன்பக்கம் இருந்த கடைகளை அஞ்சலி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சக்கரை பாண்டிக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். இதில் சக்கரபாண்டி தம்பி ரவி என்பவர், தங்களது இடத்தில் இருக்கும் அந்தக் கடைக்கு மாநகராட்சியில் வரி ரசீது செலுத்தியுள்ளனர்.
அதனை அறிந்த மேரி சிங்கராயர் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக ரவுடி கும்பலை சேர்த்துக்கொண்டு தற்பொழுது அவர்கள் குடியிருக்கும் வீட்டையும் விட்டு வெளியே செல்லுமாறு அடிக்கடி தகராறு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்கள் உயிருக்கும் தங்கள் இடத்திற்கும் உத்தரவாதம் கேட்டு சகாயமேரி பெட்ரோல் கேனுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தார். அதனை நோட்டமிட்ட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்த காவலர்கள் பெட்ரோல் கேனை எடுத்து விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
மேலும் பையில் மிளகாய் பொடி வைத்திருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும்பொழுது யாரும் தகராறு செய்யக் கூடாது என தற்காப்புக்காக மிளகாய் பொடி வைத்திருந்ததாக சகாயம் மேரி காவலர்களிடம் தெரிவித்தார்.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.