அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட அரசு மதுபான கடையில் கடை ஊழியர்கள் சீலை உடைத்து மதுவை கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் முழுவதும் 500 அரசு மதுபான கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 15 கடைகள் மூடப்படும். குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ளது, குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களை பாதிக்கும் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு முற்பட்ட ரவுண்ட் ரோடு பகுதியில் 3129 அரசு மதுபான கடை செயல்படுகிறது. இந்த மதுபான கடை அருகே மூன்று பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் காவல் நிலையம், சினிமா திரையரங்குகள் மற்றும் கிராம பகுதிக்கு செல்லும் முக்கிய பகுதியாகவும் இந்த சாலை உள்ளது. இப்பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அறிவித்த மதுபான கடை மூடப்படும் என்ற அரசு அறிவித்த நிலையில், இன்று இந்த 31 29 மதுபான கடையும் பூட்டப்பட்டு அரசு அதிகாரிகளால் நள்ளிரவில் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 11 மணிக்கு மதுபான கடை ஊழியர்கள் வந்து சீலை அவர்களாக அகற்றிவிட்டு, உள்ளே இருந்த மதுபானங்களை இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் கதவை திறந்து மதுபானங்கள் கொண்டு செல்வதை யாரும் பார்த்து விடாதபடி, மதுபானங்களை கடத்தினர்.
மேலும், அருகில் யாரும் வராதபடி மதுபானம் வெளியே சென்றவுடன் கதவை மூடினர். அரசு அதிகாரிகள் சீல் வைத்து சென்றதை மதுபான ஊழியர்கள் எப்படி அகற்றுனீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பிய போது, நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று கூறி மதுபான கடையில் உள்ளே சென்று மூடிவிட்டனர்.
இதையடுத்து, பொதுமக்கள் தகவலின் பெயரில் அங்கு வந்த காவல் துறையினர் கடை ஊழியர்களிடம் கதவை திறக்கச் சொல்லி எதற்காக கதவை திறந்தீர்கள் என்று கேட்ட பொழுது, நாங்கள் ஸ்டாக் பார்க்கிறோம் என்று ஊழியர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், ‘நாங்கள் தான் சீல் வைத்தோம், நாங்களே அகற்றி உள்ளே செல்கிறோம். யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.’ என்று ஊழியர்கள் கூறியதால், இப்பகுதி மக்கள் வளர்ச்சி அடைந்தனர். மேலும், அரசு அதிகாரிகள் வைத்த சீலை ஊழியர்கள் அகற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.