கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் வசித்து வந்த பழங்குடி பளியர்இன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த சடையாண்டிபுரம், சிறுமலை அடிவாரத்தில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின பளியர்இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளான உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக, அவ்வப்போது கொடைரோடு, அம்மைய நாயக்கனூர் கடைபகுதிகளுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், திண்டுக்கல், மதுரை பேசிய நெடுஞ்சாலை சடையாண்டிபுரம் பிரிவு அருகே டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த ரமேஷ் (39) என்பவர், அப்பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதனால் அந்த சிறுமி கர்ப்பிணியானதாகவும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சியமளா அமையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமியிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் போக்சோ மற்றும் பழங்குடியின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல, இதற்கு முன் இரண்டு பழங்குடி பளியர்இன சிறுமிகள் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்றுள்ளதாகவும், இது குறித்து இப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், இதற்கு முன் சம்பவங்கள் குறித்தும் உரிய விசாரணை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.