ஆத்தூர் அடிப்படை வசதிகள் செய்து தராதால் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அமைச்சரின் சொந்த தொகுதியில் பொதுமக்கள் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் சொந்த தொகுதியான இத்தொகுதியில் உள்ள முன்னிலை கோட்டை ஊராட்சி. பண்ணப்பட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ‘ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியல… நீ வந்து அதிமுக-வை அழிக்கப் போறியா’… அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி!!
இவர்கள் அதிக அளவில் விவசாயக் கூலித்தொழிலாளராக வேலை செய்து வருவதாகவும், தங்களது பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. கேள்வி கேட்டால் ஊராட்சி நிர்வாகம் ஊராட்சி ஒன்றியம் மிரட்டுவதாகவும், தற்போது வரை அடிப்படை வசதிகள் எதுவும் தங்களது பகுதிக்கு செய்து தரப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் காரணமாக வரும் 19ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மேலும், தேர்தலை புறக்கணிக்க போகிறோம் என்று கூறியதால் திமுகவினர் நேற்று ஊருக்குள் வந்து மிரட்டி சென்றனர் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
தற்போது பண்ணைபட்டி பகுதியில் ஊர் முழுவதும் கருப்பு கொடிகளை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவித்திருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் திமுகவினர் கருப்புக்கொடி மற்றும் வைக்கப்பட்டுள்ள பேனரை அகற்றச் சொல்லி பொதுமக்களை மிரட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.