திண்டுக்கல் ; ஒட்டன்சத்திரம் அருகே கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடப்பருத்தியூர் கிராமத்தில் உடுமலைபேட்டையை சேர்ந்த விவசாயி செல்லத்துரை என்பவரின் சொந்தமான தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்தது. ஆழமாக வெட்டும் போது பாறைகள் இருந்ததால் வெடி வைத்து எடுக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பந்தலின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியதில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளிமந்தயத்தை சேர்ந்த சின்னராஜ் மகன் மணி (30) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கீரனூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வெடிவைத்த தோட்டத்தில் ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் விசாரணை சைய து வருகின்றனர்.
கிணறு வெட்டுவதற்காக வெடி மருந்து பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.