விருவீடு அருகே, முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி, விவசாயி மனைவியை கடத்திய முறுக்கு கம்பெனி அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த, விருவீடு போலீஸ் சரகம் தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (35). இவர் மனைவி சரஸ்வதி (34). இவர்களுக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளன.
சோழவந்தான் அருகே குருவித்துறையைச் சேர்ந்த சேகர் மகன் பிரகாஷ் (31), கேரளாவில் முறுக்கு கம்பெனி நடத்தி வருகிறார். இவர், அடிக்கடி தெப்பத்துப்பட்டி கிராமத்திற்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி முதல் தங்கப்பாண்டி மனைவி சரஸ்வதியை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்கபாண்டி தனது உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினார்.
பின்னர், விருவீடு காவல் நிலையத்தில் தனது மனைவி சரஸ்வதியை, குருவித்துறையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முறுக்கு கம்பெனியில் வேலை தருவதாக கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று விட்டதாக, புகார் செய்தார். இதுகுறித்து விருவீடு காவல்துறை சார்பு ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன சரஸ்வதியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கப்பாண்டி தனது மகன் மகளுடன் இன்று விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தனது மனைவியை தேடி, கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனால், இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.