புதுச்சேரி : புதுச்சேரியில் மென்பொருள் நிறுவனத்தின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் வெளியீட்டுபோலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் கனுவாபேட்டை சேர்ந்தவர் வினோத் (22). பட்டதாரியான இவர் நேற்று லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு நேர்காணலுக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை அந்நிறுவனத்தின் வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று விட்டு வந்து போது, அவரது அப்பச்சி வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவர் இது குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் அந்நிறுவனத்தின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் இரண்டு டிப்டாப் ஆசாமிகள் ஹெல்மட் மற்றும் மாஸ்க் அனிந்து கொண்டு அங்கு வருவதும், அதில் ஒருவர் மட்டும் இறங்கி வினோத்தின் இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு செல்வதும், மற்றொருவர் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகி இருந்து. தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த தன்வந்திரி நகர் போலீசார், பட்டபகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற டிப்-டாப் ஆசாமிகளை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.