Categories: தமிழகம்

வீட்டுமனை பட்டா கோரி மனு…செவி சாய்க்காத அரசு அதிகாரிகள்: அரூரில் கண்ணீர்மல்க மாற்றுத்திறனாளி உண்ணாவிரத போராட்டம்..!!

தருமபுரி: அரூர் கச்சேரி மேட்டில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாற்றுத்திறனாளி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு(52). இவர் இரண்டு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லாமல் தவித்து வருகிறார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் தனக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பல முறை கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இதனடிப்படையில் அரூர் அடுத்த கீரைப்பட்டி இந்திரா நகரில் இருளர் காலனி பகுதியில் இவருக்கு பட்டா வழங்கப்பட்டது.

மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பகுதியில் குடிபெயர கூடாது என தெரிவித்து கிராம மக்களே அந்த நிலத்தை அபகரித்து கோவில் கட்டியதால் வேறு இடத்தை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார். அதன் பின்பு அரூர் அம்பேத்கர் நகர் பகுதியிலேயே இவருக்கு இரண்டு சென்ட் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு 2 லட்சம் ரூபாய் செலவு செய்து அடித்தளம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு ஒதுக்கப்பட்ட இடமானது அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடம் என்பதால் அரூர் அடுத்த செக்காம்பட்டி கிராமத்தில் இவருக்கு வேறுரொரு இடமும் வழங்கப்பட்டது. அதற்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என தெரிவித்து தனக்கு உடனடியாக மனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் இன்று அரூர் கச்சேரிமேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வந்த வருவாய் துறையினரிடம் கண்ணீர் மழ்க பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

UpdateNews360 Rajesh

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

1 hour ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

2 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

4 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

5 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

6 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

7 hours ago

This website uses cookies.