Categories: தமிழகம்

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி…!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி…!!

உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பின், அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில் செந்தி பாலாஜியின் நீதிமன்ற காவல் 12வது முறையாக டிச.15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு தரப்புக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. அதாவது, ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில், புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ.15ம் தேதி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சிகிச்சை முடிந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

6 minutes ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

10 minutes ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

16 minutes ago

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

2 hours ago

வெளியே வந்ததும் உன்னை கொன்னிடுவேன்… நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்!

மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…

2 hours ago

குட் பேட் அக்லிக்கு மூடு விழா நடத்திய கேங்கர்ஸ்? கடைசில இப்படி ஆகிடுச்சே!

களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…

2 hours ago

This website uses cookies.