Categories: தமிழகம்

‘என்னை ஏன் ஜாமீன்ல எடுக்கல’…மதுபோதையில் நண்பர்களிடையே தகராறு: இளைஞருக்கு சரமாரி கத்திக்குத்து…ஆபத்தான நிலையில் சிகிச்சை..!!

சென்னை: குற்ற வழக்கில் கைதான நண்பர்களை ஜாமீனில் எடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி தாசாமகான் 3வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் புளியந்தோப்பு வ.உ.சி நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் இவரது தம்பி அபி ( எ ) அபிமன்யு. அண்ணன் தம்பி இருவரும் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.

நசீர், தேவேந்திரன், அபிமன்யு 3 பேரும் சேர்ந்து திருவான்மையூர் பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வழக்கில் தேவேந்திரன் மற்றும் அவரது தம்பி அபிமன்யு ஆகிய இருவர் மட்டும் ஜாமினில் வெளியே வந்தனர். நசீரை இவர்கள் ஜாமினில் வெளியே எடுக்கவில்லை. அதன் பிறகு சில மாதங்கள் சிறையில் இருந்த நசீர் சமீபத்தில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் ஓட்டேரி பி.எஸ் மூர்த்தி நகர் ஹவுசிங் போர்டு பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நசீர் அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தேவேந்திரனை அழைத்து ஏன் என்னை ஜாமீனில் வெளியே எடுக்கவில்லை என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த தேவேந்திரன் வீட்டிற்குச் சென்று தனது தம்பி அபிமன்யுவிடம் நடந்ததைக் கூறி வீட்டிலிருந்து கத்தியை எடுத்துக் கொண்டு இருவரும் நசீர் மது அருந்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்து நசீரை ஓங்கி கத்தியால் கழுத்தில் வெட்டி உள்ளனர்.

இதில் நசீருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி அங்கேயே மயங்கி விழுந்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

19 minutes ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

32 minutes ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

57 minutes ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

1 hour ago

ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து தரதரவென இழுத்து? பொது இடத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி…

சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…

2 hours ago

பிரதமர் மோடி பதவி விலகல்? தேசிய களத்தில் சூடுபிடித்த முக்கிய கருத்து.. பாஜக நிலைப்பாடு என்ன?

பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…

2 hours ago

This website uses cookies.