மாவட்ட வருவாய் அதிகாரிக்கு 1 மாதம் சிறை தண்டனை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி!
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20.52 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கபட்டதாக ஆர்.ராஜேந்திரன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் வருவாய் அதிகாரிக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம் வருவாய் அதிகாரியாக இருந்த நர்மதா என்பவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை தண்டிக்காமல் விட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவார்கள், அதிகாரிகளுக்கு வலுவான செய்தியைக் கூறும் வகையில் இந்த சிறை தண்டனை அமையும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.