விவாகரத்தான தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்டு டார்ச்சர் செய்வதாக பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு பெண். இவருக்கும் பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆகியுள்ளது. விவாகரத்து ஆன நிலையில் முன்னாள் கணவர் அவரை அடிக்கடி நேரில் சென்று வாழவிடாமல் டார்ச்சர் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண் வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லும் இடத்தில் அவரை குறித்து தவறாக பேசியும், அவரது புகைப்படத்தை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து முன்னாள் கணவரும், கணவரது உறவினர்களும் வலைதளத்தில் பதிவிடுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மன விரக்தி அடைந்த அந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரை காப்பாற்றி, சமரசம் பேசி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தினர்.
அட்லீ-அல்லு அர்ஜூன் கூட்டணி பல நாட்களாகவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாகவும் அத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள்…
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ரெட்ரோ. இந்த படம்…
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
This website uses cookies.