விவாகரத்தான தன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வலைதளங்களில் பதிவிட்டு டார்ச்சர் செய்வதாக பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு பெண். இவருக்கும் பொள்ளாச்சி கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் ஆனது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து ஆகியுள்ளது. விவாகரத்து ஆன நிலையில் முன்னாள் கணவர் அவரை அடிக்கடி நேரில் சென்று வாழவிடாமல் டார்ச்சர் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் அந்த பெண் வேலைக்கு சென்றாலும் வேலைக்கு செல்லும் இடத்தில் அவரை குறித்து தவறாக பேசியும், அவரது புகைப்படத்தை தவறான முறையில் ஆபாசமாக சித்தரித்து முன்னாள் கணவரும், கணவரது உறவினர்களும் வலைதளத்தில் பதிவிடுவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மன விரக்தி அடைந்த அந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
அப்போது பணியில் இருந்த காவலர்கள் அவரை காப்பாற்றி, சமரசம் பேசி அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுக்க அறிவுறுத்தினர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.