புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம் விராலிமலை பொன்னமராவதி கந்தர்வகோட்டை, கீரனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை தங்களின் தீபாவளி செலவை முன்னிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காரைக்குடி தேவகோட்டை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வியாபாரிகள் வேன்களில் வருகை புரிந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு ஆட்டுச்சந்தை கூடியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வேனில் ஏற்றி சென்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிக அளவில் இருந்தது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகளுக்கும் தீபாவளியை ஒட்டி நல்ல விலை கிடைக்கும் என்பதாலும், வியாபாரம் மும்முரமாக நடைபெறும் என்பதாலும், வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். ஆட்டுச்சந்தையானது புதுக்கோட்டை நகரில் வாரவாரம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இந்த வாரமும் இன்று நடைபெற்றது. ஆனால் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு இந்த வார ஆட்டுச் சந்தையில் வியாபாரம் ரூ. 3 கோடியை தாண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.