திருவள்ளூர் ; ஆரணி பேரூராட்சியில் 3 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் மன்ற கூட்டத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் வாயில் கருப்புத் துணி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் .
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து பேரூராட்சி கவுன்சிலர் கூட்டத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பொன்னரசி நிலவழகன் 13வது வார்டு திமுக உறுப்பினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் பொன்னரசி குறித்து அவதூறாக துண்டு பிரசுரங்களை ஓட்டியும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பியுள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவர் தூக்க மாத்திரைகளை உண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி மற்றும் செயல் அலுவலர் கலாதரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இதில், திமுக, அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்பு கொடியை கட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக பெண் வார்டு உறுப்பினருக்கே திமுக ஆட்சியில் உரிய பாதுகாப்பு இல்லை என கூறி, அவதூறு பரப்பிய நபரை கைது செய்ய வேண்டும் என அதிமுக, திமுக, சுயேட்சை வார்டு உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணி கட்டி, தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.