திண்டுக்கல் : பழனியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு இன்று டெண்டர் விடப்பட்ட நிலையில் டெண்டரில் கலந்து கொள்ள வருகை தந்த ஒப்பந்ததாரர்களை திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் அணைக்கட்டு ஷட்டர் பழுதுநீக்கம் மற்றும் கால்வாய் நவீனப்படுத்துதல் 75லட்சம் ரூபாய் உள்பட 8பணிகளுக்கு மொத்தம் 11கோடியே 17லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏலம் விடப்படுகிறது.
கடந்த மாதம் 27ம்தேதி ஏலம் நடைபெறவிருந்த நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒப்பந்ததாரர்களின் கார்கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஏலம் ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் ஏலம் நடத்த அறிவிக்கப்பட்டுளள் நிலையில் இன்று மாலை 3மணிவரை டெண்டர் போட பொதுப்பணித்துறை அனுமதித்துள்ளது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று பல்வேறு ஊர்களில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்க வந்தனர். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் போடுவதற்கு ஒப்பந்ததாரர்கள் வந்தபோது அலுவலக வாயிலிலேயே பழனி நகராட்சி கவுன்சிலர் வீரமணி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒப்பந்ததாரர்கள் கையிலிருந்த டெண்டர் பையை கவுன்சிலர் வீரமணி பிடுங்கிக் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு போலீசார் கண்டும் காணாமல் அமைதியாக வேடிக்கை பார்த்ததை அடுத்து ஆவேசமடைந்த ஒப்பந்ததாரர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அங்குவந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் டெண்டர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்குமாறு போலீசாரிடம்
கேட்டபோது போலீசார் அனுமதி மறுத்ததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஒப்பந்ததாரர்களை கலைந்துபோக சொன்னபோது அவர்கள் மறுத்து பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையினர் ஒருதரப்பிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் ஒப்பந்ததாரர்களை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.