தமிழகம்

ஓரங்கட்டியவர்களை இழுக்கும் திமுக.. தவெக உட்கட்டமைப்பால் விறுவிறுப்பா?

மாநிலம் முழுவதும் தவெகவின் தாக்கத்தை உணர்ந்து திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த நபரான திருநெல்வேலி அப்துல் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்​கப்​பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்​பட்​டுள்ளது. அது மட்டுமல்லாமல், அதிமுகவில் இருந்து வந்த ஈரோடு தோப்பு வெங்க​டாசலம், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரையும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு​களில் இருந்து ஒதுக்​கிவைக்​கப்பட்ட செஞ்சி மஸ்தானையும் மாவட்டப் பொறுப்​பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏனென்றால், இப்படி, கட்சிக்குள் அதிருப்​தி​யுடன் இருந்த மக்கள் செல்வாக்​குள்ள நபர்கள் எல்லாம் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் பக்கம் திரும்பி​விடாமல் இருக்கவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். முக்கியமாக, திமுகவிலிருந்து தவெகவுக்கு சிலர் போகலாம் என உளவுத் துறை தந்த தகவலின் அடிப்​படையில் இத்தகைய நடவடிக்கைகளை திமுக தலைமை வேகப்​படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதை அறவே மறுத்துள்ளார், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான். இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசியுள்ள அவர் “திமுகவில் மாவட்டப் பொறுப்​பாளர்கள் நியமனம் என்பது கட்சியைப் பலப்படுத்தும் மற்றும் தேர்தலுக்கான ஒரு யுக்தி.

தவெகவுக்கு பயந்துதான் தலைமை இப்படிச் செய்கிறது என்று சொல்வது பேதமை. மற்ற கட்சிகளில் இருந்து நீக்கப்​பட்​ட​வர்கள்தான் திமுகவுக்கு வருகின்றனரே தவிர, திமுக​விலிருந்து யாரும் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. அதுமட்டுமல்​லாமல், திமுகவிலிருந்து நீக்கப்​பட்​ட​வர்கள் கூட தவெக பக்கம் இதுவரை செல்ல​வில்லை.

இதையும் படிங்க: ஜிவி பேயை வைத்து திகில் காட்டினாரா..இல்லை கடுப்பேத்தினாரா..’கிங்ஸ்டன்’ பட விமர்சனம்!

இவ்வாறு இருக்கும் போது தவெகவின் பலம் என்ன? நிலைப்பாடு என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் ​தி​முகவுக்கு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தவெக உடன் 2021 தேர்தலில் திமுகவுடன் வேலை பார்த்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இணைந்திருப்பதால் திமுகவுக்கு சற்று சலசலப்புடனே காணப்படுகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Hariharasudhan R

Recent Posts

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

42 minutes ago

அஸ்திவாரம் தோண்டும் போதே அபசகுணம்.. புதிய கட்டிடத்துக்காக காவு வாங்கிய பழைய கட்டிடம்!

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…

1 hour ago

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

2 hours ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

2 hours ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

3 hours ago

“இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?

இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…

4 hours ago

This website uses cookies.