மாநிலம் முழுவதும் தவெகவின் தாக்கத்தை உணர்ந்து திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த நபரான திருநெல்வேலி அப்துல் வஹாப்பின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அதிமுகவில் இருந்து வந்த ஈரோடு தோப்பு வெங்கடாசலம், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோரையும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட செஞ்சி மஸ்தானையும் மாவட்டப் பொறுப்பாளர்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஏனென்றால், இப்படி, கட்சிக்குள் அதிருப்தியுடன் இருந்த மக்கள் செல்வாக்குள்ள நபர்கள் எல்லாம் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் பக்கம் திரும்பிவிடாமல் இருக்கவே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். முக்கியமாக, திமுகவிலிருந்து தவெகவுக்கு சிலர் போகலாம் என உளவுத் துறை தந்த தகவலின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கைகளை திமுக தலைமை வேகப்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதை அறவே மறுத்துள்ளார், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சூர்யா வெற்றிகொண்டான். இது தொடர்பாக பிரபல நாளிதழிடம் பேசியுள்ள அவர் “திமுகவில் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் என்பது கட்சியைப் பலப்படுத்தும் மற்றும் தேர்தலுக்கான ஒரு யுக்தி.
தவெகவுக்கு பயந்துதான் தலைமை இப்படிச் செய்கிறது என்று சொல்வது பேதமை. மற்ற கட்சிகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள்தான் திமுகவுக்கு வருகின்றனரே தவிர, திமுகவிலிருந்து யாரும் எந்தக் கட்சிக்கும் போகவில்லை. அதுமட்டுமல்லாமல், திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கூட தவெக பக்கம் இதுவரை செல்லவில்லை.
இதையும் படிங்க: ஜிவி பேயை வைத்து திகில் காட்டினாரா..இல்லை கடுப்பேத்தினாரா..’கிங்ஸ்டன்’ பட விமர்சனம்!
இவ்வாறு இருக்கும் போது தவெகவின் பலம் என்ன? நிலைப்பாடு என்ன என்றே தெரியாத நிலையில் அவர்களைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தவெக உடன் 2021 தேர்தலில் திமுகவுடன் வேலை பார்த்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இணைந்திருப்பதால் திமுகவுக்கு சற்று சலசலப்புடனே காணப்படுகின்றனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
விட்றாதீங்கண்ணா, ஃபைட் (Fight) பண்ணிட்டே இருங்கண்ணா, ஸ்ட்ராங்கா (Strong) இருங்கண்ணா என சீமானுக்கு அண்ணாமலை தைரியம் கூறியுள்ளார். சென்னை: பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
This website uses cookies.