சென்னையில் பணம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிக் கொண்டிருந்த முதியவரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் தெற்கு 11வது பிரதான சாலையில் ஆந்திராவை சேர்ந்த மண்ணு ரமணய்யா (74) என்பவர் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறார். 14 வீடுகள் கொண்ட இந்த பிரமாண்ட குடியிருப்பை கடந்த 2020ம் ஆண்டில் இருந்து கட்டி வருகிறார்.
மேலும் படிக்க: KFC சிக்கனில் ஸ்டீல் கம்பி… நெழிந்த புழு… குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ; பெற்றோர் பரபரப்பு புகார்..!!!
கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், 188வது வார்டு திமுக கவுன்சிலர் சமீனா செல்வம் என்பவரின் ஆதரவாளர்கள் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருமுறை மிரட்டிச் சென்ற நிலையில், நேற்று வந்து பணம் கேட்டு மிரட்டி முதியவரை கன்னத்தில் தாக்கியுள்ளனர்.
ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியவர், திமுக பிரமுகர்கள் தாக்கியதில் நிலைகுலைந்து போகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் முதியவர் அளித்துள்ள புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.