பெரம்பலூரில் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய திமுக ஒன்றிய செயலாளர் மதியழகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
மேலும் படிக்க: தாய்ப்பாலை குடித்துவிட்டு விஷப்பாலை ஊட்ட நினைப்பதா..? மிகப்பெரிய பாவச்செயல்… அமைச்சருக்கு எச்சரிக்கை!
அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன் பொது இடங்களில் தங்கள் சமூக மக்களிடையே ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், குறிப்பிட்ட வன்னியர் சமூகத்தை மட்டும் இழிவாக பேசியும், கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவன மருத்துவர் இராமதாஸ் அவர்களை அவமரியாதையாகவும், தன் சமூகமான பட்டியல் சமூகத்தில் தனக்கு நல்ல பெயர் வர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வன்னியர் சமூகத்தின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் நோக்கத்தில் போலியான அவதூறு கருத்துக்களை பேசி உள்ளதோடு, இரு சமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தி ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
எனவே, திமுக நிர்வாகி மதியழகன் மீது தகுந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்திருக்கிறோம். மனு மீது நடவடிக்கை இல்லை என்றால், மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என தெரிவித்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.