கரூர் பாராளுமன்ற தொகுதி மக்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே திமுகவினர் வீடு, வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் தொடர்பாக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் குறிப்பாக கரூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் மினி கனரக ஆட்டோவில் வைத்து வீடு, வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்தும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சிறப்பு திட்டங்கள் குறித்த துண்டறிக்கையுடன் அட்டைப்பெட்டியில் வைத்து மூன்று சில்வர் சம்படங்கள் வீடு, வீடாக விநியோகித்து வருகின்றனர்.
கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக, காங்கிரஸ் என யாருக்கு ஒதுக்கப்படும் என்று கூட்டணிக்குள்ளையே குழப்பம் நீடித்து வரும் நிலையில், திமுகவினர் இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகம் செய்து வருவதால், கரூர் தொகுதி திமுகவுக்குதான் ஒதுக்கப்படலாம் என்று பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தேமுதிக பாராட்டிய நிலையில், அதிமுக உடனான கூட்டணியில் விரிசலா என்ற கேள்வி…
பாலிவுட்டில் எதார்த்தம் இல்லை எனக் கூறியுள்ள அனுராக் காஷ்யப், விரைவில் மும்பையை காலி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மும்பை: இது…
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
This website uses cookies.