விழுப்புரம் : வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே வாக்களிக்க வருபவர்களிடம் வலுக்கட்டாயமாக நிறுத்தி திமுகவினர் ஓட்டு கேட்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு திமுக அமைச்சர் பொன்முடி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியாகும். இந்த மையத்தில் திமுக முகவர் ஒருவர் திமுக சின்னம் பொருத்தப்பட்ட துண்டுப்பிரசுரம் மற்றும் பூத் ஸ்லிப் ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வெளிப்படையாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுகவினர் வாக்கு சாவடி மையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்படவே அதிமுக திமுக இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இந்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு இருதரப்பினரையும் மோதலை தடுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் சிறிது நேரம் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.