மதுபான ஊழல் புகாரை அமலாக்கத்துறை ஆளும் திமுக அரசு மீது வைத்துள்ள நிலையில், இது 2026 தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிதான் இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி ஆட்சியின் சர்ச்சைக்குரிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் களமிறங்கின.
இதன்படி, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவில் தொடங்கிய இந்த கைது நடவடிக்கை, கடைசியாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் வரை நீடித்தது. இந்தக் கைது வரிசையில் தெலுங்கானா முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ் மகளும், அம்மாநில எம்எல்சியுமான கவிதாவும் சிக்கி கைதானார்.
இதனால், டெல்லியில் ஆம் ஆத்மி 10 ஆண்டு கால ஆட்சியை பறிகொடுக்கவும் முதன்மைக் காரணமாக இருந்தது. இந்த நிலையில், இதே கருவியை தற்போது மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ளது. இதன் முன்னோட்டமாக, தமிழ்நாட்டில் மதுபான நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மதுபான பார்கள் டெண்டர்கள், மதுபானங்கள் கொள்முதல், மதுபானங்கள் விற்பனை என அனைத்திலும் அதீத முறைகேடுகளின் மூலம் ரூ,1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!
இதனை முன்கூட்டியே தெரிவித்து வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை வீடியோ வெளியிட்டு, வருகிற திங்கள்கிழமை டாஸ்மாக் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தார். இதனிடையே, தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவும் இந்த ஊழலை முன்னிறுத்தி, பட்ஜெட் தாக்கலில் இருந்து வெளிநடப்பு செய்தது என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.