ஓசியில் சரக்கு கேட்டு பணகுடி டாஸ்மாக் பாரை சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பனகுடி புறவழி சாலையில் அரசு டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக்கில் நேற்று மாலை நேரத்தில் குடிப்பதற்காக ராஜ் என்பவர் வந்துள்ளார். இவர் பணகுடி பேரூராட்சி 15வது வார்டு திமுக கவுன்சிலர் ஆஷாவின் கணவர் ஆவார். டாஸ்மாக் ஊழியர்களிடம் மிரட்டும் தோணியில் சென்று ஓசியில் மது பாட்டில் கேட்டு இருக்கிறார்.
அதற்கு ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த ராஜ், ‘கவுன்சிலரான எனக்கு மது கொடுக்க மாட்டாயா..’ ! எங்க ஆட்சியிலே கொடுக்க மாட்டாயா…” எனக் கூறி தகராறில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், ஓசியில் மது கிடைக்காத நிலையில், டாஸ்மாக் பாரில் உள்ள சேர்களை உடைத்துள்ளார். இதனால், அங்கு ஏற்கனவே குடித்து கொண்டு இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது குறித்து பார் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.