திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சியின் 25வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினராக சிவா என்பவரது தந்தை நாகராஜ் என்ற சரவணன். இவர் தனது வீடான பாறைப்பட்டி பகுதியில் இருந்து மக்கான் தெரு பள்ளிவாசல் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த மர்ம நபர்கள் நாகராஜ் மீது மிளகாய் பொடி தூவி உள்ளனர்.
இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் எழுந்து ஓட துவங்கிய போது, ஓட ஓட பட்டப்பகலில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனால் திண்டுக்கல் மதுரை காந்திஜி புது ரோடு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி பயந்து ஓட துவங்கின.
உடனடியாக தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் பட்டப்பகலில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மர்ம கும்ப கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.