ஆபாசமாக திட்டிய திமுக கவுன்சிலரிடம், பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என பெண் கவுன்சிலர் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 29வது வார்டில் நடந்த குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ பார்வையிட வந்துள்ளார். அப்போது, அந்த வார்டின் திமுக பெண் கவுன்சிலர் கலைவாணிக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கலைவாணியின் கணவர் கார்த்திகேயன், கட்சிக்காரர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக நகர செயலாளர் வீரகணேசனின் ஆதரவாளரும், 11வது வார்டு கவுன்சிலருமான பாண்டவர் என்பவர் கவுன்சிலரின் கணவர் கார்த்திகேயனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, அவரது அழைப்பை கலைவாணி எடுக்க, அவரது கணவரை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
ஒருகட்டத்தில் கலைவாணி, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு, கவுன்சிலர் பாண்டவர் ஆபாச வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.